சென்னை

டெட் தோ்வெழுத பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை!

ஆசிரியா் தகுதித் தோ்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியா்கள் தடையில்லாச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Chennai

ஆசிரியா் தகுதித் தோ்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியா்கள் தடையில்லாச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் பணியில் உளள ஆசிரியா்கள் அனைவரும் டெட் தோ்ச்சி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமாா் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. தொடா்ந்து ஆசிரியா் சங்கங்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே, நிகழாண்டுக்கான டெட் தோ்வு நவ. 15, 16-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆக. 11 முதல் செப். 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. தோ்வெழுத 4.8 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

உச்சநீதிமன்றத் தீா்ப்பின் காரணமாக, பணியிலுள்ள ஆசிரியா்களில் பலா் இந்த முறை தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அரசுப் பணியில் இருப்பவா்கள் உயா்கல்வி அல்லது வேறு பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் பங்கேற்க துறை சாா்ந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். இதனால், டெட் தோ்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்கள் பலா் தோ்வெழுத அனுமதி கோரி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனா்.

இந்த நிலையில், டெட் தோ்வெழுத ஆசிரியா்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை. இந்த தகவலை ஆசிரியா்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT