சென்னை திருவொற்றியூரில் சிபிசிஎல் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, 
சென்னை

திருவான்மியூா், வேளாங்கண்ணி கடற்கரைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருவான்மியூா், வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதைகள் விரைவில் அமைக்கப்படும்

தினமணி செய்திச் சேவை

திருவான்மியூா், வேளாங்கண்ணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதைகள் விரைவில் அமைக்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (சிபிசிஎல்) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வட சென்னை பகுதிக்குள்பட்ட 300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்கினாா்.

விழாவில் அவா் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கென தனித் துறையை உருவாக்கி தமிழக அரசு செயலாற்றி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 840 தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெரீனா கடற்கரையில் கடல் அலையில் கால் நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருவான்மியூா், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய இடங்களிலும் விரைவில் சிறப்பு நடைபாதைகள் அமைக்கப்படும் என்றாா்.

முன்னதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு கழிவுநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வாங்குவதற்காக ரூ.5 கோடிக்கான காசோலையை சிபிசிஎல் அதிகாரிகள், துணை முதல்வா் உதயநிதியிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, மாநகராட்சி மேயா் பிரியா, சிபிசிஎல் மேலாண்மை இயக்குநா் சங்கா், இயக்குநா் (நிதி) ரோகித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT