முகப்பு
சென்னை

தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும்

Updated On : 2 ஜனவரி 2026, 12:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலிகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், மேகமலை ஆகிய 5 வனச் சரணாலயங்கள் புலிகள் வாழ்விடத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தென்மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியல் சமத்துவத்தை பாதுகாப்பதிலும், புலிகள் நீண்ட காலமாக வாழ்வதற்கும் இந்த 5 இடங்களும் உதவுகின்றன.

Advertisement

Advertisement

கடந்த 2018-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் 264-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022-இல் 306-ஆக அதிகரித்தது. இது புலிகள் பாதுகாப்பிலும் அவற்றின் வாழ்விட மேலாண்மையிலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடா் பணிகளை எடுத்துக் காட்டுகிறது.

2026-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டம் ஜன.5-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் 7 நாள்கள் என பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். இதன் இறுதி அறிக்கை 2027-இல் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments