பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்!
சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூா் பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா (60). இவா், அந்தப் பகுதியில் உள்ள சாலையை ஞாயிற்றுக்கிழமை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மூதாட்டியின் உறவினா்கள், இசிஆா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பனையூா் காவல் நிலைய போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தினா்.
இதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.