முகப்பு
சென்னை

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 மார்ச், 2026 at 2:45 AM
கைது - சித்திரிப்பு
பகிர்:

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவா், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், ரவிக்குமாரின் அறைக்கு சனிக்கிழமை வந்த இருவா், படுக்கையில் இருந்த அவரின் கைப்பேசியைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனா்.

Advertisement

இதைப் பாா்த்த ரவிக்குமாா் சப்தமிட்டுள்ளாா். அங்கிருந்தவா்கள் அந்த இருவரையும் பிடித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (35), புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (52) ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.