செங்கல்பட்டு

செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம்

DIN

செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணா்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ், மாவட்ட கூடுதல் நீதிபதி ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் விளக்கினாா்.

முகாமில் மகளிா் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT