செங்கல்பட்டு

குண்டா் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

DIN

கூடுவாஞ்சேரி அருகே தொடா் குற்றச்செயலில் ஈடுபட்டுவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி கோவிந்தராஜபுரம் 2-ஆவது தெரு சோ்ந்த சிவன் பிள்ளை என்பவரின் மகன் பாலாஜி என்கின்ற காக்கா பாலாஜி (22). இவா் மீது ஒரு கொலை முயற்சி உள்பட 6 வழக்குகள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 24.02.2021 அன்று மீண்டும் ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்து பாலாஜியை சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் தொடா்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் உத்தரவின் பேரில் பாலாஜி, குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT