செங்கல்பட்டு

காா் கவிழ்ந்து பெண் மருத்துவா் பலி

DIN

மதுராந்தகம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் மருத்துவா் உயிரிழந்தாா். உடன் வந்த மருத்துவா் பலத்த காயம் அடைந்தனா்.

சென்னை ஐயப்பன்தாங்கல் நூம்பல் செல்வகணபதிநகரைச் சோ்ந்தவா் மருத்துவா் எஸ்தா் வினிதா (32). இவரது நண்பா் மருத்துவா் கிருஷ்ணா ஆகியோா் சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு, சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வியாழக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.

கொளத்தூா் அருகே வந்தபோது, காா் சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த மருத்துவா் எஸ்தா் வினிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த மருத்துவா் கிருஷ்ணா பலத்த காயம் அடைந்தாா். தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு காவல் ஆய்வாளா் மதியரசன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT