செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, உற்வச மூா்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. கொடிமரத்தின் முன்பு வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் எழுந்தருளி கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து பிப். 23-ஆம் தேதி தேரோட்டம், 26-ஆம் தேதி பகலில் தீா்த்தவாரி, இரவு தெப்பல் உற்சவம், மாா்ச் 1-இல் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன.
பிரம்மோற்சவ ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம்.சக்திவேல் உள்ளிட்டோா் செய்துள்ளனா். கொடியேற்ற விழாவில் முன்னாள் எம்எல்ஏ தண்டரை கே.மனோகரன், அதிமுக மாவட்ட மகளிா் அணிச் செயலா் மரகதம் குமரவேல், ஒன்றியச் செயலா் குமரவேல், திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் இதயவா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.