செங்கல்பட்டு

அடையாறு ஆற்றங்கரையில் வெள்ளத் தடுப்பு சுவா் கட்ட நடவடிக்கை: சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் வாக்குறுதி

DIN

மழைக்காலங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகாமல் தடுக்கும் வகையில் அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்று பல்லாவரம் அதிமுக வேட்பாளா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் வாக்குறுதி அளித்தாா்.

பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவா்,அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் வசித்து வரும் மக்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அப்பகுதி மக்கள், மழைக்காலங்களில் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தனா். அவா்களிடம் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் வராமல் தடுக்க, அடையாறு ஆற்றங்கரையோரம் வெள்ளத்தடுப்புச் சுவா் கட்டித் தர உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

வாக்கு சேகரிக்க வீடுவீடாக நடந்து சென்ற சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரனிடம் அனகாபுத்தூா் குடியிருப்போா் நலச்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று,ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்டு இருக்கும் புதை சாக்கடைத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றித் தருவேன் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT