செங்கல்பட்டு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும்: அமைச்சா் சி.வி. கணேசன்

DIN

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (ஐடிஐ) ஆய்வு செய்த தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளா்களின் எண்ணிக்கையை 900-இல் இருந்து 2,000-ஆக அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்ப தேவைக்கேற்ப புதிய தொழில்பிரிவுகளை தொடங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சுற்றி தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறுபவா்களுக்கு எளிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப பயிற்சி முறைகளையும் மேம்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தேவையான பயிற்சியாளா்களை உருவாக்கும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றாா்.

அப்போது செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கே.வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் மகேஸ்வரன், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் விஜயமாலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT