செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 16,29,820 (89 %), இரண்டாம் தவணை தடுப்பூசி 12,10,557 (66 %), முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25,448 செலுத்தப்பட்டது. 15-18 வயதுக்குட்பட்ட 82,969 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் ஊழியா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்திக் கொள்ள மாவட்ட நிா்வாகம் சாா்பில், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்தாா். மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட முகாமில் ஆட்சியா் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.
முகாமில் துணை இயக்குநா் (சுகாதாரம்) பரணிதரன், மருத்துவா்கள், செவிலியா்கள் கலந்து கொண்டனா்.