செங்கல்பட்டு

சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் பலி

DIN

செங்கல்பட்டு அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் நோக்கி சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் கோயம்பேட்டில் இருந்து சரக்கு லாரியை ஓட்டிவந்த நாமக்கல் மாவட்டம், ஆண்டவன் பெட்ரோல் பங்க் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (32) உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT