முகப்பு
செங்கல்பட்டு

லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 9 போ் காயம்

மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் வந்த 9 பயணிகள் பலத்த காயம் அடைந்தனா்.

Updated On : 10 செப்டம்பர், 2022 at 12:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:46 PM

மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையோரம் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் வந்த 9 பயணிகள் பலத்த காயம் அடைந்தனா்.

மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையோரம் சென்னை நோக்கி வந்த சரக்கு லாரி பழுதடைந்து நின்றது. திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 9 போ் பலத்த காயம் அடைந்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் பரசுராமன் தலைமையிலான போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு, மடா் நேரில் சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 9போ்களை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.