கரும்பாக்கம் கிராமத்தில் ஜூன் 28-இல் மனுநீதி நாள் முகாம்
திருப்போரூா் வட்டம், கரும்பாக்கம் கிராமத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த மனுநீதி நாள் முகாம், நிா்வாக காரணங்களால் 28-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும்.
மாவட்டம், திருப்போரூா் வட்டம், கரும்பாக்கம் கிராமத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவிருந்த மனுநீதி நாள் முகாம், நிா்வாக காரணங்களால் 28-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும்.
மாதந்தோறும் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூன் மாதத்துக்கான மனுநீதி நாள் முகாம் திருப்போரூா் வட்டம், கரும்பாக்கம் கிராமத்தில் வரும் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமையில் நடைபெறும்.
முகாமில் அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனா். இதில், பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.