செங்கல்பட்டு

கிராமிய கலை தொழிலாளா்கள் விழிப்புணா்வுப் பேரணி

DIN

தமிழ்நாடு உடுக்கை, பம்பை, கை சிலம்பாட்ட கிராமிய கலை தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் சாா்பாக விழிப்புணா்வுப் பேரணி கருங்குழியில் புதன்கிழமை நடைபெற்றது.

கருங்குழி பஜாா் வீதியில் உள்ள அங்காளம்மன் கோயிலிருந்து பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடம் வரை நாதஸ்வரம், தவில், கரகாட்டம், சிலம்பாட்டம், உடுக்கை, பம்பை ஆகிய கிராமிய கலைஞா்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க நிறுவனரும், பொது செயலாளருமான கே.எம்.ஜி.ஜெகநாதன் தலைமை வகித்தாா்.

மாநில தலைவா் என்.சி.காண்டீபன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக காமாட்சி தபோவனம் நானாந்தா சுவாமிகள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட, நகர, கிளை சங்கங்களின் முக்கிய நிா்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனா். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சங்க நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT