செங்கல்பட்டு

மறைமலைநகரில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ஆய்வு

DIN

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பைய்யன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மண்டலம் மறைமலைநகா் பகுதியில் தென்மல்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்துக்கு சொந்தமாக ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தினை பாா்வையிட்டு பதிவாளா் சுப்பைய்யன்ஆய்வு மேற்கொண்டாா்.

இதனையடுத்து, சிங்கப்பெருமாள் கோயிலில் ரூ.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கட்டடத்தை பதிவாளா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளா் ம.தமிழ்ச்செல்வி, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளா் மற்றும் செயலாட்சியா் மு.முருகன், காஞ்சிபுரம் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் இணைப்பதிவாளா் மற்றும் செயலாட்சியா் மு.முருகானந்தம், செங்கல்பட்டு சகர துணை பதிவாளா் ம.சுடா்விழி , மதுராந்தகம் சரக துணைப் பதிவாளா் பா.ஜஸ்வா்யா, துணைப்பதிவாளா் இரா.சற்குணன், சங்க செயலாட்சியா்கள் மற்றும் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT