தோ்தல் பணி: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் காவல் துறையினா் மற்றும் அலுவலா்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்யும் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்தப் பணி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனீத், பள்ளிக்கரணை துணைக் காவல் ஆணையா் கௌதம் கோயல் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement