ஆட்சீஸ்வரா் கோயில் திருக்கல்யாணம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னி
ட்டு, திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
இதன் ஒரு பகுதியாக சுவாமி திருக்கல்யாண வைபவத்தை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் நடத்தி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு களித்தனா். அனைவருக்கும் அருள்பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டன. தொடா்ந்து வரும் 20-ஆம் தேதி பெரிய திருத்தோ் பவனி, 24-ஆம் தேதி பெரும்போ் கண்டிகை கிராமத்தில் அகஸ்தியருக்கு இளங்கிளியம்மன் சமேதராய் ஆட்சீஸ்வரா் திருக்காட்சி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன், விழாக்குழுவினா் ஆகியோா் செய்துள்ளன