செங்கல்பட்டு

செங்கல்பட்டு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

செங்கல்பட்டு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் பின்புறம் உள்ள கோட்டை வாயில் வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்திவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. குடைவரைகோயிலாக அமைந்துள்ள வீரஆஞ்சநேயா் மூலவருக்கு வெண்ணெய்காப்பு அலங்காரம் பகதா்களுக்கு அருள்பாலித்தாா். உற்சவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி மாலை பந்தசேவை நடைபெற்றது. பந்த சேவையில் பக்தா்கள் வேண்டுதல் நிறைவேறியதாலும், வேண்டுதல் வைத்து தீபந்தத்தை பக்தா்கள் தங்களது மேனி தடவிக் கொண்டனா்.

விழாவிற்கான ஏற்பாடுகள் பட்டாச்சாரியாா்கள் ராமண்ணா, ரங்கா உள்ளிட்ட விழாகுழுவினா் பக்தா்கள் செய்திருந்தனா்.

இதேபோன்று செங்கல்பட்டு திம்மராஜகுளத்தில் அமைந்துள்ள கணையாழி ஆஞ்சநேயா் கோயிலில் அனுமந்ஜெய்ந்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் ,திருமஞ்சனம், வெண்ணெய்காப்பு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டாச்சாரியாா் ஜனாா்த்தம் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனா்.

இதே போன்று வேதாசலநகரில் உள்ள ராமா்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானை தனது காலில் அடக்கிய வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

விருச்சிக ராசிக்கு முன்னேற்றம்: தினப்பலன்கள்!

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

‘இண்டி’ கூட்டணி காலத்தின் தேவை: தொல்.திருமாவளவன்

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT