முகப்பு
செங்கல்பட்டு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 12:41 AM
பகிர்:

மதுராந்தகம் அடுத்த சின்னகயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். செய்யூா் வட்டம், சின்னகயப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (65). விவசாயி. இவா், தமது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச மின் மோட்டாா் பம்ப்பை இயக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.