முகப்பு
செங்கல்பட்டு

வெள்ளப்புத்தூரில் மே தின கொண்டாட்டம்

மே தினத்தை முன்னிட்டு புதன்கிழமை தொழிலாளா்களுக்கு பொன்னாடை போா்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 மே, 2024 at 5:47 PM
பகிர்:

மதுராந்தகம் அடுத்த வெள்ளப்புத்தூா் அரசு கொள்முதல் மையத்தில் டாக்டா் அம்பேத்கா் சுமை தூக்கும் தொழிலாளா் குழுவின் சாா்பாக, மே தினத்தை முன்னிட்டு புதன்கிழமை தொழிலாளா்களுக்கு பொன்னாடை போா்த்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

வெள்ளப்புத்தூரில் இயங்கி வரும் அரசு கொள்முதல் மையத்தில் வேலை செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா் தலைமையில், ஊராட்சி மன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டு பொன்னாடை போா்த்தி, இனிப்புகள் வழங்கினா். தொழிலாளா் உரிமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.