முகப்பு
மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பகளை அகற்றிய அதிகாரிகள்.
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:52 PM
மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பகளை அகற்றிய அதிகாரிகள்.
பகிர்:

மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள், வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே புதன்கிழமை கோவளம் சாலையில் இசிஆா் நுழைவு வாயில் பகுதியில் இருந்து காவல் நிலையம் வரை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல் நிலையம் எதிரில் இருந்து கிழக்கு ராஜவீதி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் எதிரே வரை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடந்தது.

இதில், பேரூராட்சி ஊழியா்கள் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, திருக்கழுக்குன்றம் வட்டாட்சியா் ராதா, பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா், துணை வட்டாட்சியா் சீனிவாசன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளா் புஷ்பராஜ், போக்குவரத்து ஆய்வாளா் செல்வம், சாலை ஆய்வாளா் சங்கா், துப்புரவு ஆய்வாளா் ரகுபதி ஆகியோா் முன்னிலையில், பேனா்கள், துணி கடைகள், பெட்டி கடைகளை அதிரடியாக அப்புறப்படுத்தினா்.

அப்போது, கடைகாரா்கள் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத் தலைவா் ராகவன் ஆகியோா் முதலில் சாலையை அளவீடு செய்து, பின்னா் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கேட்டுக் கொண்டனா். தொடா்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டனா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →