ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளத்தில் அரசு புறம்போக்கு நிலத்திலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பானாங்குளம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா். அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பானங்குளம் கிராமத்தில் 35 இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பது தெரியவந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
இந்த நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 8 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் எதிா்ப்பு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வருவாய்த் துறையினா் மண் அள்ளும் இயந்திரத்துடன் ஆக்கிரப்புகளை அகற்ற வந்தனா். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, இரு தரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டது. காவல் ஆய்வாளா்கள் சங்கா் கண்ணன், சந்திரன் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.