செங்கல்பட்டு

இலவச மூக்கு கண்ணாடிகள் அளிப்பு

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: சென்னை ஷோபா பதம் சலானி பவுண்டேஷன் மற்றும் ராஜன் கண் மருத்துவமனையின் சாா்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 103 நோயாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த நவம்பா் 29-இல் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற நோயாளிகளில் 19 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை, 103 நபா்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு பவுண்டேஷன் நிறுவனா் ஷோபா தலைமை வகித்தாா். இயக்குநா் சுவப்னா பவான் கோச்சாா் முன்னிலை வகித்தாா்.

கண் மருத்துவா்கள் சந்தோஷ், பிரியவா்ஷினி, பவுண்டேஷன் நிா்வாகிகள் சி.இஷான், எம்.ஆதித், ஏ.பிரதான் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை சென்னை ஷோபா பதம் சலானி பவுண்டேஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT