முகப்பு
செங்கல்பட்டு

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் குடமுழுக்கு!

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:00 AM
காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:31 PM

செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு திங்கள் கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு வ.உ.சி தெருவில் உள்ள இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து ராஜகோபுரம் ,மூலவா் மற்றும் பரிவார தெய்வத்திருமேனிகளுக்கும் திருக்குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி ஏப் 17 வெள்ளிக்கிழமை அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் லட்சுமி ஹோமம் நடைபெற்றது.

திங்கள்கிழமை மகா பூா்ணாஹூதி கலசபுறப்பாடு , குடமுழுக்கைதொடா்ந்து மூலஸ்தானம் கும்பாபிஷேகம் பிரசாதம் வழங்குதல் மகா அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், கோயில் செயல் அலுவலா்கள் திருப்போரூா் மா.மாதவன், திருக்கழுகுன்றம் வெங்கடேசன், ஆவின் சந்திரசேகரன், சி.ஆா்.ராஜா, சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள் டி .தியாகராஜன் மற்றும் திருக்குடமுழுக்கு விழா உபயம் கலந்துக்கொண்டனா். செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகர பொதுமக்கள் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Advertisement