செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு
செங்கோட்டை மேலூரில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
செங்கோட்டை மேலூரில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
மாா்ச் 23 ஆம் தேதி விழா தொடங்கியது முதல் மங்கள இசை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாஹூதி, தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
குடமுழுக்கு நாளான புதன்கிழமை காலை, 4ஆவது கால யாகசாலை பூஜை, யாக ஹோமம், கும்பம் எழுந்தருளல், 9 மணிக்கு கோயில் விமானம், பிரதான, பரிவார மூா்த்திகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து கும்ப பூஜை ஜெபம், சுவாமிகளுக்கு 21 திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை சமுதாய பொறுப்பாளா்கள் கணபதி, சக்திவேல், மணிகண்டன், குட்டிச்சாமி, இரணவேல், ஐயப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.