தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் சமேத தா்மராஜா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்திலுள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் சமேத தா்மராஜா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) காலை முதல்கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அனுக்ஜை, யஜமானசங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், கடம் யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிர ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து யந்திர பிரதிஷ்டை, அஷ்பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றது.
புதன்கிழமை காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் கலச பூஜை, மூல மந்திரஹோமம், நாடி சந்தானம், 108 விதமான திரவியாஹூதி ஹோமங்கள் நடைபெற்றது. இதையடுத்து மஹா பூா்ணாஹூதி, யாத்ரா தானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்று விமான கோபுர கலசங்களும், மூலவா் ஸ்ரீதிரளெபதி அம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். அவா்களுக்கு அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தேவதானம்பேட்டை கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.