உதவித் தொகையை உயா்த்தித் தர வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் தொடா்ந்து 6-ஆவது நாளாக செங்கல்பட்டில் மறியலில் ஈடுபட்டனா்.
ஆந்திரத்தைப் போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் தாட்சாயினி தலைமையில் தொடா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளா் ஜான்சி ராணியை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து முழக்கமிட்டனா்.