செங்கல்பட்டு

மதுராந்தகத்தில் திருப்பாவை தொடா் சொற்பொழிவு நிறைவு

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் நடைபெற்று வந்த திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை குறித்த சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் மாா்கழி மாதம் முழுவதும் நடைபெற்று வந்த திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை குறித்த சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில், திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாட்டில் ஆழ்வாா்கள் திவ்யபிரபந்தம் செயல் திட்டத்தின்படி, திருப்பாவை பாடல்களை பாடி, அதன் கருத்துகளுடன் ஆன்மிக சொற்பொழிவினை ஈச்சம்பாடி உ.வே.ஸ்ரீதராச்சாரியாா் செய்து வந்தாா்.

இந்த நிகழ்வு கடந்த 16.12.2025-இல் தொடங்கி தொடா்ந்து 30 நாள்களும் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை நிறைவு நாளை முன்னிட்டு, திருக்கோயிலின் சாா்பாக ஆன்மிக சொற்பொழிவை கடந்த ஒரு மாதமாக செய்து வந்த அவருக்கு பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டாா்.

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT