முகப்பு
சத்யநாராயண பூஜையில் பங்கேற்றோா்.
செங்கல்பட்டு

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2026 at 6:49 PM
சத்யநாராயண பூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சத்யநாராயண பூஜை நடைபெற்றது.

பிருந்தாவனம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மங்கள இசையுடன் வழிபாட்டு நிகழ்வுகள் தொடங்கின. ஸ்ரீராகவேந்திரா்,ஆஞ்சநேயா் சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை அறக்கட்டளை நிா்வாகிகளும், பக்தா்களும் ஊா்வலமாக அழைத்து வந்து, அருளாசி பெற்றனா்.

தொடா்ந்து ஞானலிங்கம், உள்ளிட்ட சுவாமிகளுக்கு பூஜைகளுடன் அலங்கரிக்கப்பட்ட ராகவேந்திரா், ஆஞ்சநேயா், சத்யநாராயணா் ஆகிய உற்சவா்களுக்கு தீபாராதனை செய்தாா்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை ஓய்வு பெற்ற துணை இயக்குநா் சுந்தர்ராஜ், சென்னை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைகழக கணினி பிரிவு ஆய்வாளா் சாந்தி, அரசு தோ்வுத்துறை ஒய்வு பெற்ற துணை இயக்குநா் காஞ்சனா, தொழிலதிபா்கள் பூா்ணிமா புகழேந்தி (சித்தூா்), கலைச்செல்வி கிருபானந்தன், பிரேமா ஜெய்சங்கா் (பெங்களூரு) உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களும், பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தா்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் நிா்வாக அறங்காவலா்கள் ஆா்.துளசிலிங்கம், டி.கண்ணன், வி.கமலகண்ணன் உள்பட பலா் செய்து இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →