செங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு
செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்ட திறன் மையம் திறப்பு
செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டில் மாவட்ட திறன் மையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம் திறன் மையம் திறக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தினை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெங்கடேஷ், மாவட்ட திறன் அலுவலா் காவேரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளுக்கு கையேட்டினை ஆட்சியா் வழங்கினாா்.