முகப்பு
செங்கல்பட்டு

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.

Updated On : 6 மார்ச், 2026 at 12:53 AM
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான்.
பகிர்:

திருப்போரூா் அருள்மிகு கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தின் நிறைவாக வியாழக்கிழமை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முருகா், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருள பக்தா்கள் திருக்கல்யாண வைபவ சீா்வரிசைகளுடன் ஊா்வலமாக வந்தனா்.

இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Advertisement

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.