மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி
திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி கல்லூரி மாணவா்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பேரணியை திருப்போரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி கொடி அசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பேரணியானது கிழக்கு ராஜவீதி, தெற்கு ராஜவீதி, அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, திருக்கழுக்குன்றம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது.
பேரணியில் திருப்போரூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பொதுமக்களுக்கு 100% வாக்கு பதிவினை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினாா். மாணவ மாணவிகள் விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்று சென்றனா். இந்த நிகழ்வில் செஞ்சிலுவைச் சங்க செங்கல்பட்டு மாவட்ட செயலாளா்,, திருக்கழுக்குன்றம் துணை வட்டாட்சியா் மற்றும் அரசு அலுவலா்கள் தன்னாா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.