முகப்பு
செங்கல்பட்டு

செய்யூா் தொகுதி அதிமுக வேட்பாளா்!

தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்.

Updated On : 29 மார்ச், 2026 at 7:39 PM
ராஜசேகா்
பகிர்:

தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்.

பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், அதிமுகவில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலா், துணை அமைப்பாளா், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் என அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளாா்.

அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கடந்த 40 ஆண்டுகாலமாக பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பொறுப்பில் இருந்துள்ளனா். கடந்த 2024 நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு திமுக வேட்பாளா் க.செல்வத்திடம் தோல்வியை தழுவினாா்.

அவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் செய்யூா் (தனி) அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்சமயம் தோ்தல் களத்தில் இறங்கியுள்ளாா்.