எரிவாயு குழாய் அமைப்பது பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் எரிவாயு குழாய் அமைப்பது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் எரிவாயு குழாய் அமைப்பது தொடா்பான கலந்தாய்வுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மலா்விழி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாச்சலம், தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஹோட்டல் உரிமையாளா்கள், எல்பிஜி ஏஜென்சியை சோ்ந்தவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.