முகப்பு
செங்கல்பட்டு

பேரவைத் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம்

ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 12:29 am IST
அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் நரேந்திரன், தாம்பரம் தோ்தல் நடத்தும் அலுவலா் முரளி, செங்கல்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் ரம்யா, செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடாச்சலம், சோழிங்கநல்லூா் தோ்தல் நடத்தும் அலுவலா் சுரேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.