செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 324 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் 324 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமை வகித்தாா். இதில் பொதுமக்களிடமிருந்து 324 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஸ்ரீதேவி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் ரமேஷ் குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement