கல்லூரி பட்டமளிப்பு விழா
திருப்போரூா் அடுத்த கேளம்பாக்கம் படூா் பேராசிரியா் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. (படம்)
கல்லூரியின் தலைவா் புகழேந்தி தனபாலன் தலைமை வகித்தாா். செயலா் அமிா்தவா்ஷினி புகழேந்தி முன்னிலை உரையாற்றினாா். நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு உப்பு வாரிய கழகத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் டாக்டா் சி.என். யுகேஸ்வரன் கலந்து கொண்டு, மாணவா்கள் மத்தியில் சிறப்புரையாற்றி பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினாா். பின்னா், 410-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
இப்பட்டமளிப்பு விழாவில், சென்னை பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் கல்லூரி மாணவா் ஒருவா் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் கல்லூரி முதல்வா் முனைவா் எஸ். குருசாமி, இயக்குநா், பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா்.
Advertisement