போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மே 18-இல் தொடக்கம்
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் அரசு போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி - ஐ முதல் நிலை அரசு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்பட உள்ளது. இத்தோ்விற்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சாா்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செங்கல்பட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்பு 18.05.2026 (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது.
மேலும் இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை நடைபெறும் எனவும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டித் தோ்வாளா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம், தரைத்தளம் டி-பிளாக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடா்பு கொள்ளவும்.
Advertisement
மேலும் விவரங்களுக்கு 044-27426020 / 94990 55895 / 94868 70577 மற்றும் 93447 38148 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் கேட்டு கொண்டுள்ளாா்.