சென்னை

"மலத்தில் ரத்தம் வெளியேறினால் மருத்துவரை அணுக வேண்டும்'

தினமணி

வாந்தி மற்றும் மலத்தின் வாயிலாக ரத்தம் வெளியேறினால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.ரவி தெரிவித்தார்.

சென்னையில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் "இரைப்பை குடல் ரத்த கசிவு மையத்தை' சுகாதாரத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் டாக்டர் ஆர்.ரவி கூறியதாவது: இரைப்பை மற்றும் குடலில் ஏற்படும் ரத்தக் கசிவானது, ரத்த வாந்தியாகவோ அல்லது மலத்தில் ரத்தம் கலந்தோ வெளிபடுகிறது.

சில நேரங்களில் வயிறு மற்றும் இரைப்பையிலேயே தேங்கிவிடும். இதன் காரணமாக ரத்தம் நிறம் மாற்றமடைந்து வாந்தியெடுக்கும்போது, காபி தூள் போலவும் அல்லது மலத்தில் கருப்பு நிறத்தில் தார்போலவும் தோற்றமளிக்கக் கூடும். இதன் காரணமாக நோயாளிகள் தலை சுற்றல், மயக்கமடைதல், மூச்சுவிட இயலாத நிலை, பலவீனம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இரைப்பை குடல் ரத்த கசிவு உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்ககூடிய தன்மையைக் கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த இரைப்பை குடல் ரத்த கசிவு மையத்தில் செரிமானப் பாதையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றார் டாக்டர் ஆர்.ரவி.

இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையின் மண்டல இயக்குநர் விஜயரத்னா, இரைப்பை குடலியல் துறை நிபுணர் டாக்டர் பி.பாசுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT