சரோஜினி நாயுடு பரிசுக்கு கட்டுரைகள் வரவேற்பு
நடப்பாண்டு சரோஜினி நாயுடு பரிசுக்கான மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு சரோஜினி நாயுடு பரிசுக்கான மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"தி ஹங்கர் புராஜக்ட்' அமைப்பு சார்பில் ஊராட்சி மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் குறித்த கட்டுரைகளுக்கு ஆண்டுதோறும் சரோஜினி நாயுடு பரிசு வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, மகளிர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் குறித்த கட்டுரைகள் இப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன என ஹங்கர் புராஜக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஆங்கிலம், ஹிந்தி, இந்திய மொழிகள் என மூன்று பிரிவுகளில் கட்டுரைகளை அனுப்பலாம். ஒவ்வொரு பிரிவிலும் பரிசுக்குரிய கட்டுரைக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். இது தவிர நாளிதழ்கள், பருவ இதழ்களில் ஊராட்சி அமைப்பில் பெண்கள் அளித்து வரும் பங்களிப்பு குறித்து வெளியான மிகச் சிறந்த கட்டுரைக்கு, அதனை எழுதிய செய்தியாளருக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும்.
கட்டுரைகள் "தி ஹங்கர் புராஜக்ட்', 53-ஏ, முதல் தளம், சர்ச் வீதி, தங்கம் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600040 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9840666821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.