வ.உ.சி.யின் மகனான வாலேஸ்வரன் (88) சென்னையில் சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடைபெறுகிறது.
வ.உ.சி.யின் நான்காவது மகனான வாலேஸ்வரன், தமிழக தொழிலாளர் நலத் துறையின் இணை ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் அவர் வசித்து வந்தார்.
வயது முதிர்வு, உடல் நலமின்மை ஆகிய காரணங்களால் அவர் சனிக்கிழமை காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.