சென்னை

பெண் தலைமைக் காவலர் பணியின்போது மாரடைப்பால் மரணம்

DIN

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்த நுண்ணறிவுப் பிரிவு பெண் தலைமைக் காவலர் மாரடைப்பால் இறந்தார்.
சென்னை பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதேவி (38). இவரது கணவர் சற்குணம், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இத்தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தேவி, சனிக்கிழமை வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் தனக்கு சிறிது மூச்சுத் திணறல் ஏற்படுவதாக சக ஊழியர்களிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் தேவி மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள், அவரை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தேவி மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT