சென்னை

கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ், சில வாரங்களுக்கு முன்பு வேலூர் அருகே உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு அந்தக் கல்லூரியைச் சேர்ந்த துறைத் தலைவர்தான் என காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்லூரியைச் சேர்ந்த 60 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வியாழக்கிழமை மாலை திடீரென கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தினர், அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். போராட்டம் இரவிலும் நீண்ட நேரம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி வாயிலில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT