வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீரங்கத்தில் வைகை விரைவு ரயில் டிசம்பர் 28 -ஆம் தேதி முதல் டிசம்பர் 30 -ஆம் தேதி வரை தாற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில் எண் 12635: சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் மாலை 5.59 மணியில் இருந்து 6 மணி வரை நிறுத்தப்படும்.
ரயில் எண் 12636: மதுரை - சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் ஸ்ரீரங்கத்தில் காலை 9.22 மணியில் இருந்து 9.23 மணி வரை நிறுத்தப்படும்.