சென்னை

அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் ஹெபடைடிஸ் விழிப்புணர்வுப் பேரணி

DIN

சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் ஹெபடைடிஸ் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.
சென்னை கல்லீரல் அறக்கட்டளை, பஞ்சாப் சங்கம் மற்றும் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. இந்தப் பேரணியில் 500 }க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
பேரணியைத் தொடர்ந்து அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ஆர்.பி.சண்முகம்
கூறியது:
ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சியாகும். உலக அளவில் 4 கோடி பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.
2013 -ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஹெபடைடிஸ் ஏழாவது இடத்தில் உள்ளது. எய்ட்ஸ், காசநோய் மற்றும் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.
ஹெபடைடிஸ் பாதிப்புக்குள்ளாவோருக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தென்படாது.
எனினும் மஞ்சள் காமாலை, அடிவயிற்றில் வலி, பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ஹெபடைடிஸ் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT