தமிழகத்தில் போஸ்ட் பேசிக் பிஎஸ்சி, டி.பார்ம், பி.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னையில் அக். 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
செவிலியப் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கான போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங், ஏற்கெனவே டி.பார்ம் படித்து முடித்தவர்களுக்கான பி.பார்ம் (ப்ஹற்ங்ழ்ஹப் ங்ய்ற்ழ்ஹ்), மற்றும் டி.பார்ம் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இணையதளம் மூலம் நடைபெற்றது.
இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் தரைத்தளத்தில் உள்ள 2-ஆவது கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற உள்ளது.
அக். 23-ஆம் தேதி மூன்று படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். போஸ்ட் பேசிக் பி.எஸ்சி படிப்புக்கு மட்டும், 24-ஆம் தேதியும் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தகுதிப் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.