சென்னை

அண்ணாவுக்கு க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் மரியாதை

DIN

அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள அண்ணாசிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. க.அன்பழகன் மலர் தூவி அண்ணாசிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சுதர்சனம், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT