அண்ணாவின் 109-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டம் எதிரில் உள்ள அண்ணாசிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. க.அன்பழகன் மலர் தூவி அண்ணாசிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சுதர்சனம், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.