சென்னை

காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்: பிளஸ்-1 மாணவி

DIN

காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்பத்தூர் மேனாம்பேடு முனுசாமி தெருவில் வசிப்பவர் சங்கரன். இவரது மகள் இந்துமதி (16). அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
இந்நிலையில், பள்ளியில் நடைபெற்ற காலாண்டு தேர்வில் கணிதப் பாடத்தில் இந்துமதி, குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், செவ்வாய்க்கிழமை பெற்றோர் வேலைக்கு சென்றவுடன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT